Pages

Wednesday, November 27, 2013

அதிகாரிகள் அலட்சியம் மாறுமா?

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசின் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக 321 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. 2011 முதல் 2012ம் ஆண்டு வரை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், இவை தாக்கல் செய்யப்பட்டன.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் 140 இடைநிலை ஆசிரியர்கள், 102 சிறப்பு ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் 51 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 28 பேர் என பலர் இவற்றை தாக்கல் செய்திருக்கின்றனர். இதே போல், மற்ற துறை அதிகாரிகள் மீது போடப்பட்டுள்ள அவமதிப்பு வழக்குகளை சேர்த்தால், அவை இன்னும் அதிகமாகும்.

நீதித்துறையின் முயற்சியால் லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைக்கப்பட்டாலும், அரசு உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் இது போன்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன. எனவே, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம் நீதித்துறையின் பணியில் குறுக்கிடுவது போல் இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.