Pages

Saturday, November 2, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே விண்ணப்பம் அறிமுகம்

மத்திய அரசு ஊழியர்களின், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, குரூப் இன்சூரன்ஸ் திட்டங்கள் போன்றவற்றில் பலன் பெறுவதற்கு, தனித்தனியாக விண்ணப்பிக்கும் நடைமுறையை மாற்றி, ஒரே விண்ணப்பமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு, தங்களின் பணிக்கொடை,வருங்கால வைப்பு நிதி திட்டம், குரூப் இன்சூரன்ஸ் திட்ட பலன்களைப் பெறுவதற்கு, தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இந்த நடைமுறையை மாற்றி, அனைத்து பணப்பலன்களுக்காகவும், ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும் வகையில், நடைமுறையை எளிதாக்க, மத்திய பணியாளர் மற்றும் பென்சன்தாரர் நலத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி,பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, குரூப் இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கு, பொது விண்ணப்பம் - 1ம், பென்சன்தாரர்கள் தொகுப்பு பென்சன் பெறுவதற்கு, விண்ணப்பம் -2ம் அறிமுகப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.