ரூசா திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்த, 12 மாநிலங்களுக்கு தலா 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில், Base Research, Key Technology (R&D), High End (R&D) உள்ளிட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூசாவின் திட்ட அனுமதி வாரியத்தின் முடிவின்படி, மேற்கண்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அசாம், பீகார், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்பட, 4 யூனியன் பிரதேசங்கள் ஆகியவை, இந்த நிதியுதவியைப் பெறுகின்றன.
அடுத்த 8 ஆண்டுகளில், நாட்டின் உயர்கல்வித் துறைக்கென்று ரூ.98,983 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலமாக, அறிவியல் பூங்காக்கள் நிறுவுதல், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.