Pages

Tuesday, November 19, 2013

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் சம்பளத்துடன் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழகஅரசால் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்யப்பட்டு, அவர் உடனடியாக பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் அரசு அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினால் உடனடியாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவை சந்தித்து அகவிலைப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று நவம்பர் மாத சம்பளத்துடன் 10% அகவிலைப்படி சேர்த்து வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.