Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 8, 2013

    ஊதியக்குழு முரண்பாடுகளைக் களையக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    ஊதியக் குறைகளை களைவதற்காக அமைக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 89 அரசாணைகள் வெளியிட்ட பிறகும் தொடரும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பொது அலுவலக வளாகம், நகராட்சி அலுவலம், வணிகவரித்துறை அலுவலகம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.


    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். செயலாளர் சி.கோவிந்தசாமி, பொருளாளர் எம்.ஜோ~p, சுகாதாரப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் கே.நாகராஜன், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தி.நடராஜன், பி.ராஜசேகர், பி.பாரதி, சு.பக்கீர்முகமது, செ.வீரமணி, எம்.சுவாமிநாதன் மற்றும் கு.ராஜமாணிக்கம், ரவீந்திரன், யோகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    No comments: