இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 24.10.2013 அன்று தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வில் வழக்கு பட்டியல் வரிசை எண்.33ல் பட்டியலிடப்பட்டுள்ளது. சுமார் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கு என அனைத்தும் ஒருங்கிணைத்து இன்று விசாரணை நடக்கும் என தெரிகிறது.
பட்டதாரி இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு நீதியரசர் தடை உத்தரவு வழங்கி உள்ளதால் எந்த பணியிடமும் நிரப்ப முடியாத நிலை
உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடும் நிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு முடித்து அல்லது தடை உத்தரவை நீக்கினால் மட்டுமே இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்கள் நிரப்ப தடை நீங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.