Pages

Wednesday, October 16, 2013

தனியார் பள்ளிகளுக்கே பொதுத்தேர்வு மையம்: அரசுப் பள்ளிகளுக்கு ஆர்வமில்லை

பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையம் அமைப்பதில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 150 மாணவர்கள்; நகரங்களில் 200 பேர், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதினால், அப்பள்ளிகளில் தேர்வு மையம்
அமைக்கலாம். மாணவர்களின் எண்ணிக்கை, இதை விட குறைவாக இருந்தால், அருகில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று எழுத வேண்டும். சில ஆண்டுகளாக, தனியார் பள்ளிகளுக்கே, தேர்வு மையம் அனுமதிக்கப்படுகிறது. "தேர்வு மையம் அமைந்தால், பணிச்சுமை அதிகரிக்கும்" என்ற மனநிலையில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்; இதனால், அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதைப் பயன்படுத்தி, சில தனியார் பள்ளிகள், அருகில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம்விருப்பக் கடிதம் பெற்று, தேர்வு மையங்களை தட்டிச் செல்கின்றனர்.  "கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு, இதுவும் ஒரு காரணம்" என, கல்வியாளர்கள் கூறுகின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அரசுப் பள்ளிகள் விண்ணப்பித்தால், மையம் அமைக்க அனுமதிக்கிறோம். அருகில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே, தனியார் பள்ளிகளில், தேர்வு மையம் அமைக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.