Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 2, 2013

    முதுகலை தமிழ் தேர்வு ரத்து -டி.ஆர்.பி., அவசர ஆலோசனை

    முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து,உயர்நீதிமன்றம்,மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து,டி.ஆர்.பி., அதிகாரிகள்,இன்று (அக் 2)

    காலை ஆலோசனை நடத்துகின்றனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியம்அரசு மேல்நிலைப்பள்ளிகளில்2,881 முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்பஜூலை21ல்,போட்டித்தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர்தேர்வை எழுதினர்.

    விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டுதேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி.தயாரான நிலையில்,தமிழ்பாடகேள்வித்தாளில47 கேள்விகள்பிழையுடன் இருந்ததாககூறிமதுரையைச் சேர்ந்த தேர்வர்உயர் நீதிமன்றம்,மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வைரத்து செய்துபுதிதாகவேறு தேர்வை நடத்தகோர்ட் உத்தரவிட்டது.

    இதையடுத்துகோர்ட் தீர்ப்பின்படிதமிழ் பாடதேர்வர்களுக்குபுதிய தேர்வை நடத்துவதாஅல்லது,மேல் முறையீடு செய்வதா என்பது குறித்து விவாதிக்க,டி.ஆர்.பி.அதிகாரிகள்ஆலோசனை இன்று ( அக் 2)காலை நடத்துகின்றனர். இந்த விவகாரம் குறித்துதமிழக அரசின் ஆலோசனையை பெற்றுஅதனடிப்படையில்முடிவு எடுக்கப்படும் என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


    டி.ஆர்.பி.எந்தமுடிவை எடுத்தாலும்முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம்தள்ளிப்போகும். பிளஸ் 1பிளஸ் 2 மாணவர்கள்பாதிக்காத வகையில்,காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும்,தற்போதையசூழல் காரணமாகதமிழ் ஆசிரியர் நியமனம்,தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது

    1 comment:

    santhan said...

    இந்த தீர்ப்பை முன்னாடியே சொல்லியிருந்தால் தேர்வுக்காவது தயாராகி இருக்கலாம்.