காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், மாநிலம் முழுவதும், இன்று மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன. மாணவ, மாணவியருக்கு, 2ம் பருவ புத்தகங்கள், இலவசமாக வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த மாதம், 21ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடந்தன. இதன்பின், 12 நாட்கள், தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று, வழக்கம்போல், அனைத்துப் பள்ளிகளும் துவங்குகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவ புத்தகங்கள், இலவசமாக வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, 2.5 கோடி புத்தகங்கள், அனைத்து பள்ளிகளுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.