Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 9, 2013

    122 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி

    தொகுப்பூதிய அடிப்படையில் 122 ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    முதுகலை ஆசிரியர்கள்2,645 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 3,900 பேர் எனதமிழகம் முழுவதும் 6,545 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு அறிவித்தது.முதுகலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக 5,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கவும், அதற்காக 20.18 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. பணியிடங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களேநிரப்பவும், அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், 122 ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. முதன்மை கல்விஅலுவலர் ஆனந்தி கூறுகையில், "" பட்டதாரி ஆசிரியர்கள் 87, முதுகலை ஆசிரியர்கள் 35 என 122 ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன;பி.எட்., முடித்தவர்கள், அருகில் உள்ள பள்ளிக்கு சென்று, இப்பணியில் சேரலாம்,'' என்றார். திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், 122 ஆசிரியர்கள் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. முதுகலை ஆசிரியருக்கு ரூ.5 ஆயிரம், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.4 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

    No comments: