Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 13, 2013

    இரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக்குப் பின் அமலுக்கு வரும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார்.

    வரும், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. இதை, ஏழு லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை கவனிக்கும் பணிகளில், டி.ஆர்.பி., அதிகாரிகள் மட்டுமில்லாமல், கல்வித் துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டி.ஆர்.பி.,யில் உறுப்பினர்களாக பணியாற்றி வரும், வர்மா மற்றும் உமா, முறையே, மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தேர்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். டி.இ.டி., தேர்வுப் பணிகளில், இரு அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பதால், திடீரென, பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் எனவும், டி.இ.டி., தேர்வுக்குப் பின், இவர்கள், புதிய துறையில் சேரலாம் எனவும், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார். எனவே, இவர்கள் இருவர் தவிர, மற்ற, 10 இணை இயக்குனர்களும், உடனடியாக, புதிய பணியிடங்களில் சேர முடிவு எடுத்துள்ளனர்.

    No comments: