மூவர் குழு அரசாணையில் தங்களுக்கு தர ஊதியம் உயர்வு இல்லை என அறிந்தபின்பும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் பல்வகைப்போராட்ட புகைப்படங்கள் ,நாளிதழ்செய்திகள் ,தொலைக்காட்சி ஊடக செய்திகளின் ஒளிக்காட்சிகள் பார்வையிட்டவகையில் அனேகமாக அனுபவம் மிக்க (சீனியர்)ஆசிரியர்கள்மட்டுமே,ஆங்காங்கே அதுவும் குறைந்த அளவிலே பங்கேற்பது கண்கூடாக த்தெரிகிறது.
அரசு அனைத்தையும் உளவுப்பிரிவு மூலம் கண்காணிக்கிறது.
எந்த இயக்கமாயினும் அமைப்பின் முண்ணனி தலைவர்கள்,மற்றும் தீவிரபற்றாளர்கள் கலந்து கொள்வர் என்பது இயல்பே
இதுமட்டும் போதாது, கோரிக்கை வென்றெடுக்க
உள்ளத்தில் நம்பிக்கையோடு அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் இயக்க வேறுபாடு பாராமல் யார் நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்று அவற்றை வலுப்படுத்தினால் மட்டுமே நோக்கம் நிறைவேறும்.
இது எங்கள் அமைப்பின் வேண்டுகோள் இல்லை என எவற்ரையும் ஒதுக்காமல் தர ஊதியம் கோரும் அனைத்து இயக்கப்போராட்டத்தில் அனைவரும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்பீர் !!!!!!!!!!!!!!!!!!!!
புரளிகளைநம்பாதீர்
எண்ணிக்கை மட்டுமே எதையும் வென்றெடுக்கும்.எல்லோரும் ஒருவரும் விடுபட்டாமல், சாக்கு போக்கு சொல்லாமல்,அவசரம் என சமாளிக்காமல்.காரணம் கூறாமல், அனைவரும் பங்கேற்பீர் !!!!!!!!!!!!!!!!!!!!
அதுமட்டுமே வெற்றிக்கு வழி
அதுமட்டுமே வெற்றிக்கு வழி
அது ஒன்றே வெற்றிக்கு வழி
1 comment:
very very correct. all s.g teachers should participate in all associations' agitations.
Post a Comment