Pages

Friday, August 16, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17, 18 ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டு பிரச்சினையை முடிவு செய்யும் வரை தேர்வுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
மனுதாரர் கருப்பையா கோரிக்கைபடி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்தார். கருப்பையா மனுவுக்கு தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. 

மனு விபரம் 
தமிழகத்தில் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என மனுவில் குறிப்பிடபட்டுள்ளது. இட ஓதுக்கீடு அளிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதியில் வழி உள்ளது. தேர்வு நடத்தும் மாநிலங்கள் ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிப்படி இடஒதுக்கீடு அளிக்கலாம் என விதி உள்ளது. சில மாநிலங்கள் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு மதிப்பெண்ணை தளர்த்தியுள்ளன. எனவே தமிழக அரசும் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு மதிப்பெண்ணை தளர்த்க்கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.

1 comment:

  1. case pottu time waste panratha vida padichu pass pannidalam...

    tntet and pgtrb kum time gap romba kuraivu...

    padikavey kastama iruku...

    pgtrb ku day night padicha kalaipu porathukulla just 25 days ley ye innoru exam...

    sathiyama mudiyala... health total la spoil aiduchu...

    exam date decide panravanga why yosika matenranga?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.