ஒரு பக்கம், டேப்ளட், ஸ்மார்ட்ஸ் ஸ்கிரீன் என்று சில பள்ளிகள் செயல்பட, இன்னும் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள், கரும்பலகை கூட இல்லாமல் செயல்படுகின்றன.
"சைல்டு ரிலிப் அண்டு யு" என்ற அரசு சாரா அமைப்பு, "லேர்னிங் பிளாக்ஸ்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, இன்னும் இந்தியாவில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்பட, 13 மாநிலங்களில் செயல்படும் 750 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 75 சதவீத பள்ளிகளில் டேபிள், சேர், பெஞ்ச் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. 41 சதவீத பள்ளிகளில் உள்ள மாணவர்கள், பள்ளி கட்டடங்கள் இல்லாமல் திறந்தவெளியில் படிக்கின்றனர். 11 சதவீத பள்ளிகளில், டாய்லெட் வசதி இல்லை. 34 சதவீத பள்ளிகளில் டாய்லெட்கள் இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளன.
இரண்டில் ஒரு பங்கு பள்ளிகளில் டாய்லெட் அருகே தண்ணீர் இல்லை. வட மாநிலங்களில் உள்ள 70 சதவீத பள்ளிகளில், டாய்லெட் அருகே தண்ணீர் வசதி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில், டாய்லெட் பயன்படுத்திய பிறகு கையை சுத்தம் செய்ய சோப்புகள் இல்லை என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் 80 சதவீத பள்ளிகளில், டாய்லெட் சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் சுத்தம் செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். 44 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள 74 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த இந்த ஆய்வு, அதிர்ச்சி அடைய வைக்கிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.