EMIS எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை மூலம் மாணவர்களின் விவரங்களை Web - Portalல் பதிவு செய்ய தயாராக வைத்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்வதற்கான இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே நிலுவையில் உள்ளீடு செய்யப்படாமல் உள்ள மாணவர்களின் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பெருவாரியான பள்ளிகளில் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ள போதிலும் 2012-13ஆம் கல்வியாண்டில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் வகுப்பு வாரியான விவரத்துடன் ஒப்பிட்டு இணையதளத்தில் உள்ள பதிவுகளோடு ஒவ்வொரு தலைமையாசிரியரும் சரிபார்த்து உறுதிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணியினை 31.07.2013க்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.