"சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை" என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: "பத்து ஆண்டு, 20 ஆண்டு பணி முடித்த, தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆசிரியர்களுக்கு, 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய், கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு பெற, தர ஊதியம் உயர வேண்டும். இந்த தர ஊதிய அளவில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதேபோல், வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, கல்விப்படி ஆகியவற்றில், மாற்றம் வரும் என, எதிர்பார்த்தோம். அதுபோல், இந்த படிகளில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் தர ஊதியம், 4,700 ரூபாயாக, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவரின் கீழ் வேலை பார்க்கும் கண்காணிப்பாளரின் தர ஊதியம், 4,800 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களின் தர ஊதியம், 4,900 ரூபாயில் இருந்து 5,100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அளவில், தர ஊதியம் உயர்த்தப்பட்ட போதும், இதை, ஆசிரியர்களுக்கு உயர்த்தவில்லை. இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்
teaching comunity is not united it was clearly known by the government so think and vote your valuble in the parliment election
ReplyDeleteonly the IAS VOTE ALONE ENOUGH TO GOVERNMENT
ReplyDeleteTHINK AND VOTE WE NEED RESPECT
HSC selection grade vocational Instructors , since they have no promotion, may be awarded Grade Pay from 4600 to 5400 ???
ReplyDeleteWhat an infructuous speech about vote! What can we do by our small quantity of votes? Can we do any illegal activities during elections? Or can we able to create a public opinion favour to us?
ReplyDeleteOnly need of hour is UNITY! UNITY!! UNITY!!! Because UNITY IS STRENGTH. Are, the main leaders and secondary leaders of associations, ready to gather under only one umbrella?