என்.எல்.சி., பெண்கள் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட, 164 மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் , நெய்வேலி, என்.எல்.சி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 300 மாணவியர் மதிய உணவு சாப்பிடுகின்றனர். நேற்று மதியம், மதிய உணவுடன், முட்டை சாப்பிட்ட, 164 மாணவியருக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவியர், என்.எல்.சி., பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாணவியர்களுக்கு, சிகிச்சையளித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியரை, கலெக்டர் கிர்லோஷ்குமார் பார்வையிட்டு, சிகிச்சை குறித்து, கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.