Pages

Wednesday, June 19, 2013

உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை (இன்று) முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.
இதுகுறித்து எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கல்லூரி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஜூன் 19 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

இத்தேதிகளில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிற்பகல் 3 மணி வரை மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும். மஎஇ,இநஐத, ஒதஊ, சஉப, நகஉப தேர்ச்சி அல்லது பி.எச்.டி. பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் நேரில் பெற்றுச்செல்ல வேண்டும். வழிகாட்டி நெறிமுறைகளின் படி ரூ. 250, ரூ. 500-க்கான செலுத்துச்சீட்டுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.