Pages

Tuesday, June 25, 2013

ஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்

"பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.

ஒரு மாணவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,500 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, 1.83 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டு உள்ளது. பயிற்சி அளிக்க, ஏழு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அடுத்த மாத துவக்கம் வரை, மாணவர் சேர்க்கை நடக்கும் என தெரிகிறது. "முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்த உடன், ஆங்கில பயிற்சி வகுப்பு துவங்கப்படும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.