Pages

Tuesday, June 25, 2013

குரூப்- 4: பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சியளிக்க உத்தரவு

குரூப்- 4 தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வழங்க, வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு துறைகளில் காலியாக உள்ள 5,666 உதவியாளர், சுருக்கெழுத்தர் காலிபணியிடங்களுக்கு, ஆகஸ்ட்டில் தேர்வு நடத்த உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. குரூப் - 4 தேர்வுகளில், அதிகளவில் கிராமப்புற பட்டதாரிகள் தான் விண்ணப்பிப்பர்.

தேர்வுக்கு தயாராக, அவர்களுக்கு போதிய வசதி இருக்காது. எனவே, குரூப் - 4 தேர்வு எழுதும் பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த, வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் கூறுகையில், "குரூப்- 4 உட்பட அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும், அனைத்து தேர்வுகளை சந்திக்கும் பட்டதாரிகளுக்கு, அரசு சார்பில் இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்த, வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக, பயிற்சி அளிக்கும் ஒரு நபருக்கு, ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 வீதம், மதிப்பூதியம் வழங்கவும், அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம், அரசு பணிகளுக்கு சென்ற, ஊழியர்களை வைத்தும், பயிற்சி அளிக்கலாம்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.