Pages

Wednesday, June 19, 2013

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்கள் மீண்டும் இந்த வருடம் படிப்பை தொடர வாய்ப்பளிக்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் 21 மற்றும் 22 தேதிகளில் வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் வேப்பேரி பென்டிங் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளியிலும், மைலாப்பூர் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியிலும், எழும்பூர் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் வழங்கப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு செயிண்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியிலும், காஞ்சீபுரம் அரசு சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் கவுடி மேல்நிலைப்பள்ளியிலும், மீஞ்சூர் டி.வி.எஸ்.ரெட்டி மேல்நிலைப்பள்ளியிலும் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.