Pages

Tuesday, June 25, 2013

தொழிற்கல்வி பிரிவு பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 1ல் துவக்கம்

தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, பொறியியல் கலந்தாய்வு, ஜூலை, 1ம் தேதி துவங்கி, 12 வரை நடக்கிறது. அண்ணா பல்கலையில், தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
கடந்த, 21ம் தேதி முதல் நடந்து வரும் கலந்தாய்வில், 10 ஆயிரம் பேர் வரை, பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், பிளஸ் 2வில், தொழிற்கல்வி படித்த மாணவ, மாணவியர், 5,242 பேர், பி.இ., படிப்பில் சேர விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கலந்தாய்வை, ஜூலை, 1 முதல் 12ம் தேதி வரை நடத்த, அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது.

பல்கலை வளாகத்தில் உள்ள ராமானுஜம் கம்ப்யூட்டிங் மையத்தில் நடக்கும் கலந்தாய்வுக்கு, தினமும், 500 பேர் வீதம் அழைக்கப்படுவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.