Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 3, 2013

    சென்னை உள்பட 10 நகரங்களில் ‘ஸ்மார்ட்’ போனில் டி.வி. நிகழ்ச்சி இலவச ஒளிபரப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடக்கம்

    சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் ஸ்மார்ட் போனில் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய பிரச்சார் பாரதி முடிவு செய்துள்ளது.

    10 நகரங்களில் ஒளிபரப்பு

    அரசு தொலைக்காட்சி தூர்தர்ஷன் மற்றும் அதன் துணை சேனல் நிகழ்ச்சிகளை ஸ்மார்ட் போன், டேப்லட், லேப்டாப் ஆகியவற்றில் இலவசமாக ஒளிபரப்ப பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    இந்த ஒளிபரப்பு வசதி சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை மாநகரங்களிலும், 6 நகரங்களிலும் கிடைக்க உள்ளது. இது குறித்து பிரச்சார் பாரதி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பிரச்சார் பாரதி ஏற்கனவே மொபைல் டி.வி. சேவை அளித்த அனுபவத்தை பெற்றிருக்கிறது. 2007–ம் ஆண்டு டெல்லியை சுற்றிலும் 10 கி.மீ. சுற்றளவில் இந்த ஒளிபரப்பு இருந்தது. இப்போது 90 கி.மீ. சுற்றளவில் ஒளிபரப்புகிற அதி நவீன வசதி வந்து விட்டது. அதிக தரம் வாய்ந்த சிக்னல்கள் மூலமாக இந்த ஒளிபரப்பு செய்யப்படும்’’ என்றார்.

    கூடுதல் நேரம் எடுக்காது
    இப்போது மாறி வரும் நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன், டேப்லட், லேப்டாப் ஆகியவற்றின் உபயோகம் பெருகி வருகிற நிலையில், டெலிவிஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறபோது, புதிய ஆர்வலர்களை கவர முடியும் என்று பிரச்சார் பாரதி கருதுகிறது. தற்போது செல்போனில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு சில அசவுகரியங்கள் உண்டு. குறிப்பாக படக்காட்சி வருவதற்கு கூடுதல் நேரம் ஆகிறது. ஆனால் பிரச்சார் பாரதி ஒளிபரப்பில் அதி நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதால் இந்த வசதிக்குறைபாடு நீங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனியார் டி.வி.
    பிரச்சார் பாரதி ஒளிபரப்பு தளத்தில் தனியார் டி.வி. சேனல்களும் செல்போன், டேப்லட், லேப்டாப் ஆகியவற்றில் தங்கள் ஒளிபரப்பினை செய்யவும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் 4 மாநகரங்கள் உள்பட 10 நகரங்களில் பிரச்சார் பாரதியின் இந்த ஒளிபரப்பு தொடங்கினாலும், பின்னர் நாடு முழுவதும் 40 நகரங்களுக்கு விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் டி.வி. ஒளிபரப்பு எதற்கு உதவுகிறதோ இல்லையோ செய்திகள் பார்ப்பதற்கும், கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பதற்கும் உதவும் என்பது உறுதி.

    No comments: