Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 2, 2013

    அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை வரும் ஆண்டு துவங்கும்

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ஏ.ஐ.சி.டி.இ.,யின், கொள்கையால், பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி துவங்க, கால தாமதம் ஏற்படுகிறது, என, வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
    மேலும் அவர் கூறியதாவது: கடந்த, 2012ல், முதல்வர் ஜெயலலிதா, பெருந்துறையில், அரசு பாலிடெக்னிக் மற்றும் சிவகிரியில் அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என அறிவித்தார். மேலும் இரண்டு கல்லூரியும், 2012ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும், என்றார்.

    கலை அறிவியில் கல்லூரி தொடங்கப்பட்டு, மாணவ மாணவிகள் சேர்க்கை நடந்து, கல்லூரி நடந்து வருகிறது. ஆனால், பெருந்துறை துவங்குவதாக அறிவித்த, அரசு பாலிடெக்னிக் மட்டும் துவங்கவில்லை.

    புதியதாக துவங்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு, புதுடெல்லி, அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அனுமதி வழங்க வேண்டும். அனுமதி பெற, சில வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். புதிதாக துவங்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகள் சொந்த கட்டிடத்தில் இயங்க வேண்டும். அப்போது தான் நிரந்தமாக லேத், லேப் போன்ற வசதிகளை நல்ல முறையில் செய்வார்கள் என்ற கருத்து உள்ளது.

    பெருந்துறையில் துவங்கப்பட உள்ள, அரசு பாலிடெக்னிக், சொந்த இடத்தில் விரைவில் துவங்கும். வரும் கல்வி ஆண்டில், சேர்க்கை நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது என்றார்.

    No comments: