அகவிலைப்படி உயர்வு அளித்ததற்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவையினர் முதலமைச்சர் ஜெ.,விற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 8 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய ஆசிரியர் பேரவை தலைவர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டப் பொருளாளர் தேவதாஸ்காந்தி, துணைத்தலைவர்கள் ஐசக்சாமுவேல், விஜயராகவன், துணைச்செயலாளர் ராஜன் ஜெபஸ்டின், சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் ஜேசுபாதம் கோயில்ராஜ், செயலாளர் காந்தி, பொருளாளர் அலெக்ஸ்பாண்டியன், ஆழ்வை அகஸ்டின், கருங்குளம் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment