Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 7, 2013

    மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூடும் திட்டம், இன்று அங்கு நாளை இங்கு - நாளிதழ் செய்தி

    ஆந்திராவில் 10 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    சித்தூரில் உள்ள பிசிஆர் பள்ளி வளாகத்தில் ஆந்திர மாநில அரசு ஆசிரியர் சங்க மாநில செயலாளர் கோவிந்தய்யா தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் கோவிந்தய்யா பேசியதாவது:மாநிலம் முழுவதும் 10 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் தொடக்க, நடுநிலை பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 1500 பள்ளிகள் மூடப்பட உள்ளன. சித்தூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாது. மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை சென்று படிக்க வேண்டி வரும். ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு, மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டிவரும். எனவே, உடனடியாக இதற்கு பதிலாக மாற்று திட்டத்தை அரசு ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில், நிர்வாகிகள் செங்கல்ராய மந்தடி, கங்காதரம், பாஸ்கர் ரெட்டி, நவீன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    No comments: