Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 8, 2013

    கோவாவில் நடந்த அபாகஸ் போட்டி தமிழக மாணவர்கள் சாதனை

    கோவா மாநிலத்தில் தேசிய அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் நெல்லை, குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.
    கோவா மாநில தலைநகர் பனாஜியில் தேசிய அளவில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஐ.எம்.ஏ.,எனப்படும் அபாகஸ் போட்டி நடந்தது. இப்போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    தமிழகத்தில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்து 15 பேர் கலந்துகொண்டனர். பாளை.என்ஜி.,காலனி சவுத் இந்தியா நாலெட்ஜ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் தலைமையில் 7 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.

    இதில் ஹரிஹரராஜ், சுஜித் குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர். குமரி மாவட்டம் தெரிசனங்தோப்பு பகுதியை சேர்ந்த கவுஷிகா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் பயிற்சியாளர் அய்யப்பன் தலைமையில் சென்ற மாணவர்களில் அருண், சுடலையாண்டி, பிரவின் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். லட்சுமி, தங்கம் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.

    சாதனை படைத்த மாணவ, மாணவிகளை அவர்களின் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

    No comments: