Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 2, 2013

    போலி வருகை பதிவேடு விவகாரம் தலைமையாசிரியை மீது நடவடிக்கை

    அரசு பள்ளியில், போலியான மாணவர் வருகை பதிவேடு தயாரித்த, தலைமையாசிரியை மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, ஆட்சியர் உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்வலசை மலை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளியில், கடந்த மாதம் 17ம் தேதி, ஆட்சியர் விஜய்பிங்ளே ஆய்வு செய்தார்.

    அப்போது, போலியான மாணவர் வருகை பதிவேடு தயாரித்து, மோசடி நடந்திருப்பது தெரிந்தது. பள்ளி வருகை பதிவேட்டில், இடம் பெற்ற, 50 மாணவர்களில், 32 மாணவர்கள் வருகை புரிந்ததாக, பதிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால், மாணவர்களிடம், கலெக்டர் நடத்திய விசாரணையில், பள்ளியில் படிக்காத மாணவர்கள் சிலரும், போலியாக வகுப்பறையில் இருந்தது தெரிந்தது. முறைகேடு குறித்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, ஆதிதிராவிடர் நல அலுவலர் யுவராஜூக்கு, ஆட்சியர் விஜய்பிங்ளே உத்தரவிட்டார்.

    மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து, நேரில் ஆய்வு நடத்தி, அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கூறினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் யுவராஜ், நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கீழ்வலசை கிராமத்தில் உள்ள பள்ளியில், ஆட்சியர் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள் குறித்து, விசாரணை நடந்தது.

    விசாரணையில், போலி வருகை பதிவேடு இருந்தது உண்மை என தெரிந்தது. அதையடுத்து, தலைமையாசிரியை சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர் விஜய்பிங்ளே உத்தரவிட்டார்.

    மேலும், 14 கி.மீ தூரம் மலைப்பாதையில் நடந்து செல்லும் நிலையில் உள்ள இப்பள்ளியில், பெண் ஆசிரியர் பணிபுரிவது சிரமம். அதனால், வரும் கல்வி ஆண்டில், இவரை வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யவும், மலைப்பகுதியை சேர்ந்த ஆண் ஆசிரியரை, பணியில் நியமிக்கவும், ஆட்சியர் விஜய்பிங்ளே உத்தரவிட்டார்.

    No comments: