Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 10, 2013

    மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்வு

    "ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை பயிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களின், கல்வி உதவித் தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
    சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் கல்வி பட்டப் படிப்பு வரை படிக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு, 500 ரூபாய் முதல், 3,500 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்.

    இதேபோல், பார்வையற்ற மாணவர்களின், வாசிப்பு உதவியாளர்களுக்கு, அவர்கள் படிக்கும் வகுப்புகளுக்கு ஏற்ப, 1,500 முதல், 3,000 ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இத்தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும். கால்கள் பாதிக்கப்பட்ட, 400 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டர், இனி, 1,000 பேர்களுக்கு வழங்கப்படும்.

    மனவளர்ச்சி குன்றியோருக்கு, சிகிச்சை அளிக்க, 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்படும். பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்கள், முடநீக்கு வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டு, இப்பிரிவு செயல்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

    No comments: