Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 25, 2013

    பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்

    பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது குறித்து, 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
    சென்னை, சேலையூரில் சிறுமி ஸ்ருதி, பள்ளி பேருந்தின் ஓட்டையில் இருந்து விழுந்து பலியானாள். இதையடுத்து, பள்ளி வாகனங்களை விபத்தில்லாமல் இயக்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்தது. ஓட்டுநருக்கு, ஐந்து ஆண்டு அனுபவம், உதவியாளர்கள், ஓட்டுநர் உரிமம் பெற்று இருப்பதுடன், குழந்தைகளை கையாளும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தை , மாதம் ஒருமுறை கூட்டி, வாகனங்கள் பராமரிப்பு, ஓட்டுநர், உதவியாளர் குறித்து கருத்து கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

    இதையடுத்து, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ள நிலையில், வரும், ஜூன், 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

    இதையடுத்து, பள்ளி வாகனங்களில் விதிமுறைகளை முறையாக பின்பற்றுப்படுவது குறித்து, கண்காணிக்க போக்குவரத்து துறை, தீவிரமாக களம் இறங்கவுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும், அந்தந்த பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ., தலைமையில், 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, பரிசோதிக்கும் பணியை துவங்கவுள்ளோம். நாளை(இன்று), சென்னையில் நடைபெறவுள்ள போக்குவரத்து அதிகாரிகள் மத்தியிலான ஆலோசனை கூட்டத்தில், இதுகுறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    

    No comments: