Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 4, 2013

    பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி, 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம், கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

    தமிழகத்தில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் இசக்கியப்பன் கூறியதாவது:
    தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்று வந்தனர். 2004ம் ஆண்ட முதல் 6,7, மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மாதம் 4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.பின்னர் இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டதால் ஏற்கனவே பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திய பின்புதான் புதியதாக நியமிக்கப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை கால முறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். ஆனால் அப்படி செய்யாததால் ஒரே பணி இரு வேறு ஊதிய விகிதம் என்ற நிலையில் உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.எனவே, இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி தர்ணா, உண்ணாவிரத போராட்டம், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதில் 10ம் தேதி நடக்கும் மானிய கோரிக்கைக்கு முன்பாக நல்ல தீர்வு காணப்படும் என்றார். எனவே, பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசுஉதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாறள்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். இதுசம்பந்தமாக பள்ளி கலி மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இல்லையெனில் இதுசம்பந்தமாக மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மாநில பொது செயலாளர் கூறினார்.பேட்டியின் போது நிர்வாகிகள் எட்வின் பிரகாஷ், பாபு, ராஜ மார்த்தாண்டம், சரவணன், ஆறுமுகதாஸ், செல்வின், சாம்ராஜ் உட்பட பலரும் உடனிருந்தனர்.

    No comments: