2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும்.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஆகஸ்ட் 17ம் தேதியும், இரண்டாம் தாள் ஆகஸ்ட் 18ம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 1,100 உதவிப் பேராசிரியர் நியமனத்தை முடித்திடவும், டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு அறிவித்து, இரு ஆண்டுகள் ஆகியும், இன்னும் இந்தப் பணி நியமனம் நடக்கவில்லை. இந்த விவகாரம், சென்னை, ஐகோர்ட்டுக்கு சென்ற நிலையில், ஒன்பது மாதங்களுக்குள், உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை முடிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, 1,100 உதவிப் பேராசிரியர் நியமனத்தை முடித்திடவும், டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு அறிவித்து, இரு ஆண்டுகள் ஆகியும், இன்னும் இந்தப் பணி நியமனம் நடக்கவில்லை. இந்த விவகாரம், சென்னை, ஐகோர்ட்டுக்கு சென்ற நிலையில், ஒன்பது மாதங்களுக்குள், உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை முடிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.