Pages

Wednesday, May 15, 2013

1108 மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பை தொடர முடியாத மாணவர்

சிதம்பரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் பிளஸ் 2 தேர்வில் 1108 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க விரும்புகிறார். ஆனால் சீட் கிடைத்தாலும் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.
சிதம்பரம் கோட்டையான்சந்தில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் ஏ.கிருஷ்ணமூர்த்தி. தினமும் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில் தனது மகன் நவீன்குமாரை சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்க வைத்தார்.

நவீóன்குமார் பிளஸ் 2 தேர்வில் 1108 மதிப்பெண்கள் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-177, ஆங்கிலம்- 176, இயற்பியல்- 183, வேதியியல்-196, உயிரியல்- 182, கணிதம்- 194. மொத்தம்- 1108.

இவரது பொறியியல் கட்ஆஃப் 191.75 ஆகும். பி.இ. மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படிக்க விரும்பும் இம்மாணவருக்கு போதிய பண வசதி இல்லாததால் அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங்கில் சீட் கிடைத்தாலும் படிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாணவர் பயில உதவ விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஏ.கிருஷ்ணமூர்த்தி, 5-18 கோட்டையான்சந்து சிதம்பரம். செல்போன் எண்: 93677 67498.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.