பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாளை, திருத்தும் மையத்திற்கு மறுநாள் அனுப்பிய, தலைமையாசிரியருக்கு, கட்டாய ஓய்வு தரப்பட்டுள்ளது.
திண்டுக்கல், நேருஜி நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், புயல்ராஜ். இவர், 10ம் வகுப்பு கணக்கு தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, தேர்வு முடிந்தவுடன், திருச்சி மையத்திற்கு அனுப்பிய விடைத்தாள்களில், ஒன்று மட்டும் அனுப்பப்படாமல், விடுபட்டு போனது.
அதை, மறுநாள் திருச்சி மையத்திற்கு, தனி நபர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பினார். இது பற்றி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அங்குள்ள அதிகாரிகள், "தபால் மூலமே விடைத்தாளை பெற எங்களுக்கு அதிகாரம் உள்ளது; தனிநபர் மூலம் அனுப்பப்படும் விடைத்தாளை பெற இயலாது" எனக் கூறி, வாங்க மறுத்தனர்.
இதையடுத்து, விடைத்தாள் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், "விடைத்தாள் விடுபட்ட சம்பவம் வேண்டுமென்றே நடைபெறவில்லை" என, புயல்ராஜ், கூறியிருந்தார்.
விசாரணை அறிக்கை கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்ட புயல்ராஜ் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இவர் ஓய்வுபெறும் நாள், ஏப்., 30ம் தேதி.
கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கு, அந்த கல்வியாண்டின் இறுதி நாளான, மே, 31 வரை பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் விடுபட்ட பிரச்னை காரணமாக, புயல்ராஜுக்கு, பணி நீட்டிப்பாக, ஓய்வுபெறும் நாளான, மே, 31க்கு பதிலாக, ஏப்., 30ல் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதை, மறுநாள் திருச்சி மையத்திற்கு, தனி நபர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பினார். இது பற்றி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அங்குள்ள அதிகாரிகள், "தபால் மூலமே விடைத்தாளை பெற எங்களுக்கு அதிகாரம் உள்ளது; தனிநபர் மூலம் அனுப்பப்படும் விடைத்தாளை பெற இயலாது" எனக் கூறி, வாங்க மறுத்தனர்.
இதையடுத்து, விடைத்தாள் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், "விடைத்தாள் விடுபட்ட சம்பவம் வேண்டுமென்றே நடைபெறவில்லை" என, புயல்ராஜ், கூறியிருந்தார்.
விசாரணை அறிக்கை கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்ட புயல்ராஜ் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இவர் ஓய்வுபெறும் நாள், ஏப்., 30ம் தேதி.
கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கு, அந்த கல்வியாண்டின் இறுதி நாளான, மே, 31 வரை பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் விடுபட்ட பிரச்னை காரணமாக, புயல்ராஜுக்கு, பணி நீட்டிப்பாக, ஓய்வுபெறும் நாளான, மே, 31க்கு பதிலாக, ஏப்., 30ல் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment