Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 5, 2013

    10ம் வகுப்பு விடைத்தாள் அனுப்ப மறந்த தலைமை ஆசிரியர்

    பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாளை, திருத்தும் மையத்திற்கு மறுநாள் அனுப்பிய, தலைமையாசிரியருக்கு, கட்டாய ஓய்வு தரப்பட்டுள்ளது.
    திண்டுக்கல், நேருஜி நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், புயல்ராஜ். இவர், 10ம் வகுப்பு கணக்கு தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, தேர்வு முடிந்தவுடன், திருச்சி மையத்திற்கு அனுப்பிய விடைத்தாள்களில், ஒன்று மட்டும் அனுப்பப்படாமல், விடுபட்டு போனது.

    அதை, மறுநாள் திருச்சி மையத்திற்கு, தனி நபர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பினார். இது பற்றி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அங்குள்ள அதிகாரிகள், "தபால் மூலமே விடைத்தாளை பெற எங்களுக்கு அதிகாரம் உள்ளது; தனிநபர் மூலம் அனுப்பப்படும் விடைத்தாளை பெற இயலாது" எனக் கூறி, வாங்க மறுத்தனர்.

    இதையடுத்து, விடைத்தாள் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், "விடைத்தாள் விடுபட்ட சம்பவம் வேண்டுமென்றே நடைபெறவில்லை" என, புயல்ராஜ், கூறியிருந்தார்.

    விசாரணை அறிக்கை கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்ட புயல்ராஜ் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இவர் ஓய்வுபெறும் நாள், ஏப்., 30ம் தேதி.

    கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கு, அந்த கல்வியாண்டின் இறுதி நாளான, மே, 31 வரை பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் விடுபட்ட பிரச்னை காரணமாக, புயல்ராஜுக்கு, பணி நீட்டிப்பாக, ஓய்வுபெறும் நாளான, மே, 31க்கு பதிலாக, ஏப்., 30ல் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    No comments: