Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 12, 2013

    பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை

    பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
    விவாதத்தில் உறுப்பினர் பாலபாரதி பேசுகையில், பல தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை பணமாக இல்லாமல் வங்கிக்கணக்கு மூலம் செலுத்தும் நிலை இருந்தால் எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது? என்பதற்கு அது ஆதாரப்பூர்வமாக இருக்கும். பிளஸ்–2 தேர்வில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகளே ரேங்க் எடுக்கிறார்கள். காரணம் பல தனியார் பள்ளிகளில் பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்.அதற்கு பதில் அளித்த அமைச்சர் வைகைச் செல்வன், ‘‘ உறுப்பினர் கூறுவதைப் போல எந்த பள்ளியிலும் பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடம் நடத்தப்படவில்லை. அதுபோன்று பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். அதேபோல், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் ஒருசில பள்ளிகளின் அங்கீகாரம் கூட நிரந்தரமாக ரத்துசெய்யப்பட்டு உள்ளது’’ என்றார்.

    No comments: