மண்டபம் அருகே காரனில் பராமரிப்பின்றி உள்ள விளையாட்டு மைதானத்தால் மாணவர்களின் விளையாட்டுத் திறன் வீணடிக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், ஊராட்சி அளவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. வாலிபால், கபாடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இந்த மைதானம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனால், மாணவர்கள் ஒன்றிய, மாவட்ட அளவில் பைக்கா விளையாட்டு போட்டிகளில் சாதித்தனர்.
இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் மாணவர்களின் உடல் திறனும் மேம்படுத்தப்பட்டது. மண்டபம் ஒன்றியம் காரனில் இந்த மைதானம் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் மண்டி, கால்நடைகள் மேயும் இடமாக மாறிவிட்டது. முறையான பராமிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றன. இதனால், இப்பகுதி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் சாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் மாணவர்களின் உடல் திறனும் மேம்படுத்தப்பட்டது. மண்டபம் ஒன்றியம் காரனில் இந்த மைதானம் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் மண்டி, கால்நடைகள் மேயும் இடமாக மாறிவிட்டது. முறையான பராமிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றன. இதனால், இப்பகுதி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் சாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
1 comment:
அரசுஉதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைப் பறித்து வருகிறார்கள். பிறகு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் உடல் திறன் விளையாட்டுத் திறன் இவற்றை எவ்வாறு பெறப் போகிறார்கள்.
Post a Comment