Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 6, 2013

    மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

    கணினி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கேட்கும் அளவு, மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் சக்தி இல்லாததால், மாணவர்களுக்கு மடிக்கணினி, படிப்படியாகச் வினியோகம் செய்யப்படுகிறது" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
    சட்டசபையில் நேற்று நடந்த உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பார்த்திபன் (தே.மு.தி.க.,) கோ.வி.செழியன் (தி.மு.க.,) ஆகியோர், "கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், போராட்டங்கள் நடக்கின்றன" என குறிப்பிட்டனர்.

    இதற்கு, பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க, தைவான் நாட்டில் உள்ள நிறுவனத்திடம், ஒப்பந்தம் செய்யப்பட்டது. தைவான் நாட்டில் பெய்த கடும் மழையால், கணினி நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மடிக்கணினிகள் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

    தமிழக அரசைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில், அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினியை வழங்க விரும்புகிறது. இதற்கு, தேவைப்படும் மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் அளவுக்கு, கணினி உற்பத்தி நிறுவனங்களுக்கு சக்தியில்லை. இதனால், படிப்படியாக ஆர்டர்கள் கொடுத்து, மடிக்கணினிகளைப் பெற்று, மாணவர்களுக்கு வழங்குகிறோம்.

    இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

    No comments: