பிளஸ் 2 விடைத்தாள் திருத்த தற்போது 7.50 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். 1.6.2006க்கு முன்பு
தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அடுத்த மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் இல்லாமல் ஒளிவுமறைவற்ற முறையில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும். முதுகலைஆசிரியர் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 720யால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். ஊதிய குழு முரண்பாடுகளை களைய வேண்டும். ஒரு நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். வரும் கல்வி ஆண்டில் ஆயிரத்து 591 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இவ்வாறு மாநில தலைவர் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.