Pages

Wednesday, April 24, 2013

கற்பித்தலில் புதிய அணுகுமுறை: ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

காரைக்கால் மாவட்டம், நிரவியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளியில் கல்வி கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இன்றைய கால நிலைக்கு ஏற்ப கல்வி கற்பித்தலை எவ்வாறு செய்ய வேண்டும் எனவும், புதிய உத்திகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஆசிரியர்கள் கற்பிப்பதை மாணவர்கள் ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்துவது அவசியம் என வல்லுநர்கள் விளக்கினர்.

மேலும் தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், அறிவியல் வரலாறு ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு புதிய அணுகுமுறை மூலம் கற்பித்தல் குறித்தும் வல்லுநர்கள் விளக்கினர். ஆசிரியர்-மாணவர் உறவு முறை எளிதாகி, கற்றலில் புதிய அனுபவத்தை மாணவர்கள் அடைய ஆசிரியர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.