To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Pages
▼
Thursday, April 25, 2013
ஈரோடு வட்டாரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி சார்பில் முப்பெரும் விழா
ஈரோடு வட்டாரத்தின் முப்பெரும் விழா 24.04.2013 வட்டாரத் தலைவர் தலைவர் தலைமையில் ஹோட்டல் சவானா கார்டன் A/Cயில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் வட்டாரச் செயலாளருமான திரு வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் திரு கோ.காமராஜ் அவர்கள் இயக்க உரையாற்றினார். ஈரோடு மாநகராட்சியின் 3வது மண்டலத் தலைவர், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயரின் சார்பில் அவரது நேர்முக உதவியாளரும், மாநகராட்சி அலுவலர்களும், அரசூழியர் சங்க மாவட்டச் செயலாளரும் பல்வேறு வட்டாரச் செயலாளர்களும் வாழ்த்துரை வழங்கினர். பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் பணிநிறைவு பெற்ற ஆசிரியருக்கும் டெல்லி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்ட போராளிகளுக்கும் பொன்னாடை அணிவித்துப் பரிசு வழங்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் நன்றி கூறினார். அனைவருக்கும் உயர்தர உணவு வழங்கப்பட்டு விழா சிறப்புற நிறைவு செய்யப்பட்டது.
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.