தமிழக ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்டக் கிளை சார்பில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக, கூட்டணி மாவட்டத் தலைவர் வெ.சம்பத்குமார் கூறியது: பள்ளிகளைப் பார்வையிட வரும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், வயதில் மூத்த பெண் ஆசிரியர்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசுகிறார். பள்ளிக் கழிப்பறையை தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களே சுத்தம் செய்ய வேண்டும்.
இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகிறார். பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய முக்கியத் தபால்களைக் கூட பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளார். மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாப் பொருள்களை வழங்குவதில் கூட இடையூறு செய்கிறார். சிறிய காரணங்களுக்காக சுமார் 45 ஆசிரியர்களை தாற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார். ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்றார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், மாநிலத் துணை தலைவர் செந்தில்குமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் சி.ஜெரோம் உள்பட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகிறார். பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய முக்கியத் தபால்களைக் கூட பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளார். மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாப் பொருள்களை வழங்குவதில் கூட இடையூறு செய்கிறார். சிறிய காரணங்களுக்காக சுமார் 45 ஆசிரியர்களை தாற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார். ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்றார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், மாநிலத் துணை தலைவர் செந்தில்குமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் சி.ஜெரோம் உள்பட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment