கிராம மக்களின் சுகாதாரம் கருதி, கழிப்பறைகள் கட்டும் விவகாரத்தில், வீட்டில் மட்டுமின்றி, கிராமத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான், 13 வயது பள்ளி சிறுவன்.
வித்தியாச முயற்சி: உத்தரபிரதேச மாநிலம், கமாரியா தமுவான் கிராமத்தைச் சேர்ந்தவன், ஓம்கார் தூபே, 13. இவனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் திறந்த வெளியிலேயே, காலைக் கடன்களை முடிப்பது வழக்கம்.
மழைக் காலங்களில், திறந்த வெளியில், மலம் கழிப்பதை மிகவும் சிரமமாக உணர்ந்த, தூபே, தன் குடும்பத்தினருக்கு என, ஒரு கழிப்பறை கட்ட ஆசைப்பட்டான். தன் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தான். குறைந்த வருமானம் உடைய குடும்பம் என்பதால், இரண்டு மாத சேமிப்பிற்கு பின், அந்த தொகையில், கழிப்பறை கட்டினர்.
இதன்பின், தங்கள் குடும்பத்தினரைப் போன்றே, கிராமத்திலுள்ள மற்றவர்களும், கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என, எண்ணிய தூபே, ஊர் மக்கள் இடையே, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினான். சிறுவனின் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் முயற்சியால், கிராமதலைவர், பொது கழிப்பறை கட்ட, நிதி ஒதுக்கினார்.
2 ஆண்டுகளுக்கு முன், ஒரு பொது கழிப்பறை கட்டப்பட்டது. அதன்பின், ஊர் மக்கள் அனைவரின் பங்களிப்போடு, தற்போது, 13 கழிப்பறைகள், கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், தான் பயிலும் பள்ளியிலும், கழிப்பறை கட்டப்பட வேண்டும் என, நினைத்தான் தூபே.
விழிப்புணர்வு: பள்ளியை கண்காணிக்க வந்த அதிகாரிகளிடம், தன் விருப்பத்தை தெரிவித்தான். தற்போது, அப்பள்ளியில், மாணவர் மற்றும் மாணவியருக்கென, தனித் தனியாக, இரு கழிப்பறைகள் கட்டப்பட்டு, அவற்றை, அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தூபேயின் இந்த தூண்டுதல் மற்றும் விழிப்புணர்வால், தாங்கள் மிகுந்த பெருமை அடைந்து உள்ளதாக, அவனின் ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். கிராம மக்களும் அவனை பாராட்டுகின்றனர்.
பெருகி வரும் சுகாதார சீர்கேட்டிற்கு மத்தியில், ஒரு சிறுவனின் தலைமையில், ஒரு கிராமமே, சுகாதார புரட்சியில் ஈடுபட்டு உள்ளது, அனைவரையும் வியப்படைய வைத்து உள்ளது.
மழைக் காலங்களில், திறந்த வெளியில், மலம் கழிப்பதை மிகவும் சிரமமாக உணர்ந்த, தூபே, தன் குடும்பத்தினருக்கு என, ஒரு கழிப்பறை கட்ட ஆசைப்பட்டான். தன் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தான். குறைந்த வருமானம் உடைய குடும்பம் என்பதால், இரண்டு மாத சேமிப்பிற்கு பின், அந்த தொகையில், கழிப்பறை கட்டினர்.
இதன்பின், தங்கள் குடும்பத்தினரைப் போன்றே, கிராமத்திலுள்ள மற்றவர்களும், கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என, எண்ணிய தூபே, ஊர் மக்கள் இடையே, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினான். சிறுவனின் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் முயற்சியால், கிராமதலைவர், பொது கழிப்பறை கட்ட, நிதி ஒதுக்கினார்.
2 ஆண்டுகளுக்கு முன், ஒரு பொது கழிப்பறை கட்டப்பட்டது. அதன்பின், ஊர் மக்கள் அனைவரின் பங்களிப்போடு, தற்போது, 13 கழிப்பறைகள், கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், தான் பயிலும் பள்ளியிலும், கழிப்பறை கட்டப்பட வேண்டும் என, நினைத்தான் தூபே.
விழிப்புணர்வு: பள்ளியை கண்காணிக்க வந்த அதிகாரிகளிடம், தன் விருப்பத்தை தெரிவித்தான். தற்போது, அப்பள்ளியில், மாணவர் மற்றும் மாணவியருக்கென, தனித் தனியாக, இரு கழிப்பறைகள் கட்டப்பட்டு, அவற்றை, அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தூபேயின் இந்த தூண்டுதல் மற்றும் விழிப்புணர்வால், தாங்கள் மிகுந்த பெருமை அடைந்து உள்ளதாக, அவனின் ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். கிராம மக்களும் அவனை பாராட்டுகின்றனர்.
பெருகி வரும் சுகாதார சீர்கேட்டிற்கு மத்தியில், ஒரு சிறுவனின் தலைமையில், ஒரு கிராமமே, சுகாதார புரட்சியில் ஈடுபட்டு உள்ளது, அனைவரையும் வியப்படைய வைத்து உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.