அரசு பள்ளிக்கு வரும், அனைத்து மாணவ, மாணவியரையும் தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக எழுத வைக்க தலைமை ஆசிரியர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளிகல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளிகல்வித்துறை இணைஇயக்குனர் முத்துபழனிசாமி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு வழங்கும் 14 வகையான நலத்திட்டங்களும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கிடைக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.
பள்ளியில் மாணவ, மாணவியர் இடைநிற்றலை தவிர்க்க 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதற்காக அனைத்து மாணவ, மாணவியருக்கும் வங்கியில் அக்கவுண்ட் துவங்க வேண்டும். இது தொடர்பான விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் தவறாக உள்ளது. அதை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் சரிசெய்து அப்டேட் செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ப பணியாற்ற வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் எழுத தெரிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். மாணவரின் பொது அறிவு வளரவேண்டும் என்பது உள்ளிட்ட நோக்கங்களை இலக்காக கொள்ளவேண்டும்.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கற்றல் பணியில் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும். நீங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தால் தான், ஆசிரியர்கள் தங்கள் கடமையை சிறப்பாக செய்வார்கள். அனைத்து மாணவருக்கும் கம்ப்யூட்டர் தொடர்பான அடிப்படை அறிவு இருக்கவேண்டும். பள்ளியில் குடிநீர்வசதி, காம்பவுண்ட் சுவர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க தலைமை ஆசிரியர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு இணை இயக்குனர் முத்துபழனிசாமி தெரிவித் தார்.இக்கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பழனிசாமி (மேல்நிலைகல்வி), பாலசுப்பிரமணியம் (உயர்நிலைகல்வி) மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விடைத்தாள் தொலைந்தால்....
இணை இயக்குனர் முத்துபழனிசாமி பேசுகையில், ‘இம்மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முதல் தற்போது நடந்து வரும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு வரை கண்காணித்து வருகிறேன். பல தேர்வு மையங்களுக்கு நான் நேரில் சென்றுள்ளேன். முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய தலைமை ஆசிரியரின் பணி பாராட்டும் வகையில் உள்ளது. விடைத்தாள் விஷயத்தில் தலைமை ஆசிரியர்கள் கவனமாக இருக்கவேண்டும். தேர்வு துவங்கும் போது எத்தனை விடைத்தாள் உள்ளது என்பதை ஒவ்வொரு நாளும் கணக்கெடுக்க வேண்டும். விடைத்தாள் எங்காவது முறைகேடாக வெளியே சென்றால் அதன் பின் விளைவுகளை தலைமை ஆசிரியர்கள் தான் சந்திக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் சென்னை ஏர்போர்ட்டில் ஒருவர் அரசு பொதுத்தேர்வு விடைத்தாளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்த போது தன்மகன் தேர்வு எழுதிய மையத்தில் இருந்து ஒரிஜினல் விடைத்தாளை எடுத்து கொண்டு வேறு விடைத்தாளை வைத்தது தெரியவந்தது. ஒரிஜினல் விடைத்தாளை ஏர்போர்ட்டில் இருந்த தனது மனைவியிடம் பெருமையாக காட்டுவதற்கு எடுத்து சென்றதாகவும் அவர் கூறினார். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கவேண்டியது அவசியம்’ என்றார்.
பள்ளியில் மாணவ, மாணவியர் இடைநிற்றலை தவிர்க்க 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதற்காக அனைத்து மாணவ, மாணவியருக்கும் வங்கியில் அக்கவுண்ட் துவங்க வேண்டும். இது தொடர்பான விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் தவறாக உள்ளது. அதை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் சரிசெய்து அப்டேட் செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ப பணியாற்ற வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் எழுத தெரிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். மாணவரின் பொது அறிவு வளரவேண்டும் என்பது உள்ளிட்ட நோக்கங்களை இலக்காக கொள்ளவேண்டும்.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கற்றல் பணியில் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும். நீங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தால் தான், ஆசிரியர்கள் தங்கள் கடமையை சிறப்பாக செய்வார்கள். அனைத்து மாணவருக்கும் கம்ப்யூட்டர் தொடர்பான அடிப்படை அறிவு இருக்கவேண்டும். பள்ளியில் குடிநீர்வசதி, காம்பவுண்ட் சுவர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க தலைமை ஆசிரியர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு இணை இயக்குனர் முத்துபழனிசாமி தெரிவித் தார்.இக்கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பழனிசாமி (மேல்நிலைகல்வி), பாலசுப்பிரமணியம் (உயர்நிலைகல்வி) மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விடைத்தாள் தொலைந்தால்....
இணை இயக்குனர் முத்துபழனிசாமி பேசுகையில், ‘இம்மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முதல் தற்போது நடந்து வரும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு வரை கண்காணித்து வருகிறேன். பல தேர்வு மையங்களுக்கு நான் நேரில் சென்றுள்ளேன். முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய தலைமை ஆசிரியரின் பணி பாராட்டும் வகையில் உள்ளது. விடைத்தாள் விஷயத்தில் தலைமை ஆசிரியர்கள் கவனமாக இருக்கவேண்டும். தேர்வு துவங்கும் போது எத்தனை விடைத்தாள் உள்ளது என்பதை ஒவ்வொரு நாளும் கணக்கெடுக்க வேண்டும். விடைத்தாள் எங்காவது முறைகேடாக வெளியே சென்றால் அதன் பின் விளைவுகளை தலைமை ஆசிரியர்கள் தான் சந்திக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் சென்னை ஏர்போர்ட்டில் ஒருவர் அரசு பொதுத்தேர்வு விடைத்தாளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்த போது தன்மகன் தேர்வு எழுதிய மையத்தில் இருந்து ஒரிஜினல் விடைத்தாளை எடுத்து கொண்டு வேறு விடைத்தாளை வைத்தது தெரியவந்தது. ஒரிஜினல் விடைத்தாளை ஏர்போர்ட்டில் இருந்த தனது மனைவியிடம் பெருமையாக காட்டுவதற்கு எடுத்து சென்றதாகவும் அவர் கூறினார். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கவேண்டியது அவசியம்’ என்றார்.
No comments:
Post a Comment