பாரதியார் பல்கலையின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 11 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து பாரதியார் பல்கலை பதிவாளர் மனோகரன் அறிக்கை:
பல்கலை சார்பில், 2010-2011ம் ஆண்டுக்கான ஆசிரியர்-ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி ஆகியவற்றுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவினம் மற்றும் ஆறாவது ஊதியக்குழுவின் நிலுவையில் உள்ள 2வது தவணை ஆகியவற்றின் மொத்த தொகை 13 கோடியே மூன்று லட்சத்து 45 ஆயிரத்து நானூற்று 42 ரூபாயை வழங்கக்கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தது.
பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது 11 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரத்து 528 ரூபாய் மானிய தொகையாக பல்கலைக்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள ஒரு கோடியே 82 லட்சத்து 79 ஆயிரத்து 914 ரூபாய் பல்கலை நிதி நல்கை குழுவிடமிருந்து நிதி வந்த பின் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள இம்மானிய தொகை பாரதியார் பல்கலைக்கு 2012-2013ம் நிதி ஆண்டுக்கான திட்டமில்லா தலைப்பின் கீழ் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஆணையின் அடிப்படையிலும் மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் முயற்சியிலும் குறிப்பிட்ட மானியத்தொகை பல்கலையின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலையில் வளர்ச்சிக்காக மானியம் வழங்கிய தமிழக அரசுக்கு, பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில், நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது 11 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரத்து 528 ரூபாய் மானிய தொகையாக பல்கலைக்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள ஒரு கோடியே 82 லட்சத்து 79 ஆயிரத்து 914 ரூபாய் பல்கலை நிதி நல்கை குழுவிடமிருந்து நிதி வந்த பின் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள இம்மானிய தொகை பாரதியார் பல்கலைக்கு 2012-2013ம் நிதி ஆண்டுக்கான திட்டமில்லா தலைப்பின் கீழ் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஆணையின் அடிப்படையிலும் மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் முயற்சியிலும் குறிப்பிட்ட மானியத்தொகை பல்கலையின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலையில் வளர்ச்சிக்காக மானியம் வழங்கிய தமிழக அரசுக்கு, பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில், நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment