அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த, 10ம் தேதி துவங்கி வரும், 27ம் தேதி வரை நடக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, சூளகிரி, தளி, ஓசூர், கெலமங்கலம் ஆகிய பத்து ஒன்றியங்களிலும் கணக்கெடுப்பும் பணி நடக்கிறது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி முறையான அரசுப்பள்ளிகளில் எவ்வித நிபந்தனையின்றி (டி.சி., தேவையில்லை) வயதின் அடிப்படையில் வகுப்பில் சேர்க்கப்படவுள்ளனர்.
கணக்கெடுப்பில் கண்டறியப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அரசுப்பள்ளி, பகல்நேர பராமரிப்பு மையம், சிறப்பு பள்ளி, வீட்டு கழி கற்றல் மற்றும் இணைப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.
மத்தூர் வட்டார வளமையத்தில் கணக்கெடுக்கும் பணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் நடந்தது. மத்தூர் கீழ் வீதியில் பள்ளி இடைநின்ற மீனா 12, சினேகா 9 ஆகிய இரு குழந்தைகள் கண்டறிப்பட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு பணியில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர் அருண்குமார், ஆசிரிய பயிற்றுனர்கள் வசந்தி, பசுபதி, சாந்தி, பெருமாள், செண்பகவள்ளி, மத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி ஆகியோர் ஈடுபட்டனர்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி முறையான அரசுப்பள்ளிகளில் எவ்வித நிபந்தனையின்றி (டி.சி., தேவையில்லை) வயதின் அடிப்படையில் வகுப்பில் சேர்க்கப்படவுள்ளனர்.
கணக்கெடுப்பில் கண்டறியப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அரசுப்பள்ளி, பகல்நேர பராமரிப்பு மையம், சிறப்பு பள்ளி, வீட்டு கழி கற்றல் மற்றும் இணைப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.
மத்தூர் வட்டார வளமையத்தில் கணக்கெடுக்கும் பணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் நடந்தது. மத்தூர் கீழ் வீதியில் பள்ளி இடைநின்ற மீனா 12, சினேகா 9 ஆகிய இரு குழந்தைகள் கண்டறிப்பட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு பணியில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர் அருண்குமார், ஆசிரிய பயிற்றுனர்கள் வசந்தி, பசுபதி, சாந்தி, பெருமாள், செண்பகவள்ளி, மத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி ஆகியோர் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.