Pages

Tuesday, April 23, 2013

563 இளநிலை உதவியாளர்களுக்கு ஏப்.25ல் பணியிட கலந்தாய்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 563 இளநிலை உதவியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பணியிடக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு அவரவர் சொந்த மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சொந்த மாவட்டங்களில் பணியிடங்கள் இல்லாததால் வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்கும், வேறு மாவட்டங்களில் பணியிடம் கோருபவர்களுக்கான கலந்தாய்வும் இதைத் தொடர்ந்து நடைபெறும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணி ஒதுக்கீடு பெற்ற அனைவரும் அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.