பிளஸ் 2, இயற்பியல் பொதுத் தேர்வின் போது, முறைகேட்டில் ஈடுபட்ட, நாமக்கல் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மீது, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை, நடந்தது. மார்ச், 11ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வின் போது, நாமக்கல்லில் உள்ள தனியார் மேல் நிலைப் பள்ளியில், தேர்வுக்கான விடைகளை, பெரிய "ப்ளக்ஸ்" பேனரில் எழுதி காட்டியுள்ளனர்.
பறக்கும்படை அதிகாரி கார்மேகம் ஆய்வின் போது, இதை கண்டு பிடித்தார். அதையடுத்து, அந்த பள்ளியின் தேர்வு மையம் ரத்து செய்யப்பட்டு, அருகே உள்ள அரசு பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டது. இம்முறைகேடு தொடர்பாக, தொடர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நாமக்கல் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் படி, பள்ளியை சேர்ந்த, ஆய்வக உதவியாளர்கள் செல்வக்குமார், யுவராஜா உட்பட, நிர்வாகத்தினர் மீது, உறுதி மொழியை மீறி நடத்தல் பிரிவில், நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பறக்கும்படை அதிகாரி கார்மேகம் ஆய்வின் போது, இதை கண்டு பிடித்தார். அதையடுத்து, அந்த பள்ளியின் தேர்வு மையம் ரத்து செய்யப்பட்டு, அருகே உள்ள அரசு பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டது. இம்முறைகேடு தொடர்பாக, தொடர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நாமக்கல் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் படி, பள்ளியை சேர்ந்த, ஆய்வக உதவியாளர்கள் செல்வக்குமார், யுவராஜா உட்பட, நிர்வாகத்தினர் மீது, உறுதி மொழியை மீறி நடத்தல் பிரிவில், நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment