"நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீதான, பல்கலைக்கழக மானிய குழுவின், 2010ம் ஆண்டின் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட வேண்டும்" என, வி.ஐ.டி., நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர், விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களின், தற்போதைய நிலை குறித்த மாநாடு, சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற, வி.ஐ.டி., வேந்தரும், இந்திய கல்வி மேம்பாட்டு சமுதாயம் அமைப்பின் தலைவருமான விஸ்வநாதன், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:
நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மீதான, பல்கலைக் கழக மானிய குழுவின், 2010ம் ஆண்டின் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட வேண்டும். அந்த விதிமுறைகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு, அந்த அமைப்பு வழங்கிய, தன்னாட்சி அதிகாரத்தை, தானே எடுத்துக் கொள்வது போலவும், பல்கலைக் கழக கல்வி முறைக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது.
யு.ஜி.சி.,யின் புதிய விதிமுறைகள், பின்நோக்கிய சிந்தனை கொண்டதாக அமைந்துள்ளது. அவை, நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் சுதந்திரத்தையும் பறிப்பதாக அமைந்துள்ளன. எப்படியாகிலும், புதிய விதிமுறைகளை அமல்படுத்தியே தீர வேண்டும் என, யு.ஜி.சி., விரும்புமானால், 2010ம் ஆண்டுக்குப் பிறகு துவக்கப்பட்ட நிறுவனங்கள் மீது செயல்படுத்தட்டும். அதற்கு முந்தைய ஆண்டுகளில் துவக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது திணிக்க வேண்டாம். மேலும், எந்தவொரு விதிமுறையும், பின்நோக்கியதாக இருக்கக் கூடாது.
யு.ஜி.சி.,யின் புதிய விதிமுறைகளை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள ஏராளமான நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், பல உயர்நீதிமன்றங்களை அணுகியுள்ளதை அடுத்து, அந்த விதிமுறைகளை அமல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தன் புதிய விதிமுறைகளை மாற்றியமைக்கவும், அதை வாபஸ் பெறவதற்கான தருணம், ய.ஜி.சி.,க்கு வாய்த்துள்ளது. இதுதொடர்பான, நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் மறுசீராய்வு வழக்கை, சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏனெனில், இந்த வழக்கு விசாரிக்கப்படும், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த இரண்டு நீதிபதிகளும், கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, ஓய்வு பெற்று விட்டனர்; அதற்கு பிறகு, இந்த வழக்கு விசாரிக்கப்படவே இல்லை. இவ்வாறு, விஸ்வநாதன் கூறினார்.
அவருடன் இருந்த, சவீதா பல்கலைக்கழக வேந்தர், என்.எம்.வீரைய்யன் கூறியதாவது: இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ள நிலையில், சில பத்திரிகைகளில், தாண்டன் கமிட்டியால், சி-பிரிவில் வகைபடுத்தப்பட்ட, 44 நிகர்நிலை கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது, உண்மையல்ல.
அந்த, 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு, யு.ஜி.சி.,யை சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அவர் கூறியதாவது:
நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மீதான, பல்கலைக் கழக மானிய குழுவின், 2010ம் ஆண்டின் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட வேண்டும். அந்த விதிமுறைகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு, அந்த அமைப்பு வழங்கிய, தன்னாட்சி அதிகாரத்தை, தானே எடுத்துக் கொள்வது போலவும், பல்கலைக் கழக கல்வி முறைக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது.
யு.ஜி.சி.,யின் புதிய விதிமுறைகள், பின்நோக்கிய சிந்தனை கொண்டதாக அமைந்துள்ளது. அவை, நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் சுதந்திரத்தையும் பறிப்பதாக அமைந்துள்ளன. எப்படியாகிலும், புதிய விதிமுறைகளை அமல்படுத்தியே தீர வேண்டும் என, யு.ஜி.சி., விரும்புமானால், 2010ம் ஆண்டுக்குப் பிறகு துவக்கப்பட்ட நிறுவனங்கள் மீது செயல்படுத்தட்டும். அதற்கு முந்தைய ஆண்டுகளில் துவக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது திணிக்க வேண்டாம். மேலும், எந்தவொரு விதிமுறையும், பின்நோக்கியதாக இருக்கக் கூடாது.
யு.ஜி.சி.,யின் புதிய விதிமுறைகளை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள ஏராளமான நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், பல உயர்நீதிமன்றங்களை அணுகியுள்ளதை அடுத்து, அந்த விதிமுறைகளை அமல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தன் புதிய விதிமுறைகளை மாற்றியமைக்கவும், அதை வாபஸ் பெறவதற்கான தருணம், ய.ஜி.சி.,க்கு வாய்த்துள்ளது. இதுதொடர்பான, நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் மறுசீராய்வு வழக்கை, சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏனெனில், இந்த வழக்கு விசாரிக்கப்படும், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த இரண்டு நீதிபதிகளும், கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, ஓய்வு பெற்று விட்டனர்; அதற்கு பிறகு, இந்த வழக்கு விசாரிக்கப்படவே இல்லை. இவ்வாறு, விஸ்வநாதன் கூறினார்.
அவருடன் இருந்த, சவீதா பல்கலைக்கழக வேந்தர், என்.எம்.வீரைய்யன் கூறியதாவது: இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ள நிலையில், சில பத்திரிகைகளில், தாண்டன் கமிட்டியால், சி-பிரிவில் வகைபடுத்தப்பட்ட, 44 நிகர்நிலை கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது, உண்மையல்ல.
அந்த, 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு, யு.ஜி.சி.,யை சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment