Pages

Sunday, April 14, 2013

12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு NCERTஆல் 18 & 19ஆம் தேதி நடைபெற உள்ளது.


தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 9012 / ஜே3 / 2013, நாள்.10.04.2013-ன் படி - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 250 தொடக்க / நடுநிலைப்
பள்ளிகளில் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  NCERTஆல் 2013 ஏப்ரல் 18 & 19ஆம் தேதிகளில் தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு  தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த கேள்வி தொகுப்புகள் கொண்டு கள அலுவலர்கள் மூலம் செயல்படுத்த தொடக்ககல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.