Pages

Sunday, April 14, 2013

அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை விட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக 2013-14 கல்வியாண்டில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்

1.துவக்க/ நடுநிலைப்பள்ளி மாணவர்களை முழுமையாக உரிய வகுப்புகளில் சேர்த்தல்.

2. 14 வகை நலத்திட்டங்களை அதன் நன்மைகளை மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு விளக்கி சேர்க்கையை கூட்டுதல்.

3. +1 வகுப்பில் அதிக மாணவர்களை சேர்த்தல்.
4. உயர் நிலைப் பள்ளிகளில் 6 மற்றும் 9 வகுப்புகளில் சேர்க்கையை அதிகரித்தல்.

5. 10 மற்றும் 12 வகுப்புகளில் இடைநிற்றலை தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை சார்ந்து மாணவர்களுக்கு விளக்கி சேர்க்கையை அதிகரித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் (2013-14) சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.